articles

img

ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஏன் ஆபத்தானது? - எம்.பாலசுப்பிரமணியன்

தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்துவது இன்று பரவலாக காணப்பட்டாலும், தமிழ கத்தில் இந்த முறை பிரிட்டிஷ் காலனிய காலத்திலேயே உருவான முதல் வடிவமாக இருந்துள்ளது.

சுமார் 1700-ஆம் ஆண்டுகளிலேயே ஆங்கிலேய நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களின் வீடு மற்றும் தோட்ட வேலைகளுக்காகவும், சமூ கத்தின் இதர பணிகளுக்காகவும் ஒப்பந்த அடிப்ப டையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுருக்கமாக சொல்வதென்றால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக் கான விதை தூவப்படும் முன்பே சமூகத்தின் சேவை சார்ந்த பணியாளர்களாக உருவான வர்க்கமே-ஒப்பந்த கூலி பணியாளர் வர்க்கமாகும்.

ஆதி ஒப்பந்தத் தொழிலாளர் பிரிவுகள்

ஆதியில் ஒப்பந்த பணியாளர் வேலைக்கு அமர்த் தப்பட்டுள்ளது குறித்து வரலாற்று ஆய்வாளர் ஜெய சீலன் ஸ்டீபன் எழுதிய ‘ஒப்பந்த கூலியாட்கள், தமிழக அடிமைகள்’ என்கிற நூலிலிருந்து பின்வரும் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. ஏவலர், கருமார், தச்சர், குதிரை காப்பாளர், புல் வெட்டுபவர், கணக்குப்பிள்ளைகள், முச்சியர், சமை யல்காரர், பொருள் வாங்குபவர், உணவு மேடைப் பணி யாளர், வண்ணார், சிப்பம் கட்டுபவர், கொடி பிடிப்ப வர், முடிவெட்டுபவர், ஆயுத உற்பத்தியாளர், எருது களை பராமரிப்பவர், பறையடிப்பவர், துப்புரவு பணி யாளர் போன்ற பல்வேறு பணிகளை செய்வதற்கான ஒப்பந்த பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர்.

இதில்  சலவைத் தொழில் பிரிவில் தான் இந்த ஒப்பந்த கூலி முறை முதலில் நடைமுறைக்கு வந்துள் ளது.

இவர்களை பணிக்கு கொண்டு வந்து சேர்க்கும் இடைத்தரகர்களாக உள்ளூர் சாதித் தலைவர்களே இருந்துள்ளனர்.  உண்மையில் இந்த ஒப்பந்த கூலி முறையானது அடிமை ஒப்பந்த முறையைவிட சற்று மேம்பட்டதா கவே இருந்துள்ளது. அடிமை முறையானது முதலா ளிக்கு தனது அடிமையிடம் வேலை வாங்குவதற்கான உரிமையை மட்டும் வழங்கவில்லை; தனது விருப்பத்தி ற்கு மாறாக செயல்படும் அடிமையை கொன்று விடு வதற்கான அதிகாரத்தையும் வழங்குகிறது!  இதிலிருந்து,

ஆதி ஒப்பந்த பணியாளர் முறையா னது காலனிய ஆட்சிக்கு ஊன்றுகோலாகத் திகழ்ந்துள் ளது என்பதோடு, பண்ணையடிமையாகவும் இல்லாத தொழில்துறை பாட்டாளி வர்க்கமாகவும் உருப்பெறாத குறை பிரசவக் குழந்தையாகவே தமிழகத்தில் தோன்றி யுள்ளது எனலாம்.

20ஆம் நூற்றாண்டில் ஒப்பந்த தொழிலாளர்கள்

19-ஆம் நூற்றாண்டின் அந்திமக் காலத்திலும், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலும் உருவாகி வளர்ந்த தொழிலாளர் சந்தை முறை  பற்றி தொழிற் சங்க முன்னோடியும்,  மார்க்சிய ஆய்வாளருமான தோழர்.சுகுமால்சென் எழுதிய இந்திய தொழிலாளி வர்க்கம் நூலில் கூறுவதாவது: “இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் இடம் பெயர்தல் என்பது தொழிற்சாலை பகுதிகளை நோக்கி யதாகவே எப்போதும் இருக்கவில்லை. பாட்டாளிக ளின் மீதான சுரண்டல் என்பது முன்னேறிய முதலா ளித்துவ நாடுகளில் காணப்படாத அம்சங்களைக் கொண்டதாகவே இங்கு இருந்தது.

பொதுவாகவே முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே ஓர் இடைத்தரகர் இருப்பதுண்டு. அவர்தான் தொழி லாளரை பணியில் அமர்த்துவார். ஓரளவிற்கு தொழிலா ளர்க்குப் பணம் கொடுப்பதும் அவரே தான். தொழிலா ளர் சந்தையின் வளர்ச்சி பெறாத தன்மை மற்றும் பொ துவாக பொருளாதாரத்தின் குழப்பமான நிலைமை தான் இதுபோன்ற இடைத்தரகர்கள் வர்க்கம் நீடித்து நிலைத்திருப்பதற்கு காரணம் ஆகும்”. மேலும்; “ஒப்பந்த முறை என்பது அடிமைத் தனத்தோடோ அல்லது சுதந்திரத்தோடோ ஒப்பிட்டுப் பார்க்கவே இயலாத ஒன்று ஆகும். உண்மையில் பார்க்கப்போனால் அது இந்த இரண்டு நிலைக்கும் இடைப்பட்டதொரு நிலையே ஆகும்” என்கிறார்.

தொழிலாளர் நலச் சட்டங்களின் உருவாக்கம்
முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண 1770-ஆம் ஆண்டி லேயே சென்னையில் தொழிலாளர் விதிகளை ஆங்கி லேய அரசு சட்டத்தின்படி கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு நூறாண்டுக்கு முன்னரே தொழிலாளர் விதிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த சட்டங்கள் ஆங்கிலேய முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளி களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட முத லாளிகளுக்கான நலச் சட்டங்களாகவே இருந் துள்ளன.

இதன் தொடர்ச்சியாக 20ஆம் நூற்றாண்டின் துவக் கத்தில் உருவான சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சி மிகுந்த காலகட்டத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இத்தகையப் போராட்டங்களின் விளைவாக சுதந்திரத்திற்கு முன்ன ரும், சுதந்திர இந்தியாவிலும் தொழிலாளர்களின் உரிமை காக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

சுதந்திரத்திற்குப் பின்னர் உருவான தொழிலாளர் சட்டங்களில் முக்கியமானது ‘ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டமாகும்’. இதனை 1970-ஆம் ஆண்டு அன்றைய மத்திய காங்கி ரஸ் அரசு இயற்றியது. இந்த சட்டத்தின் அடியொற்றி தமிழக அரசு 1975-ஆம் ஆண்டு மாநில சட்ட விதி களை உருவாக்கியது. ஆனால் இந்த சட்டமானது இயல்பிலேயே, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு-21க்கும், உழைப்பை ஊதி யத்தில் சமன்படுத்தும் சம வேலைக்கு சம ஊதியச் சட்டத்திற்கும் எதிரானதாகவே உள்ளது.

அதே நேரத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலன் காக்கும் பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. எனினும்  இந்த சட்டம் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது முதலாளிகளால் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படாத அலங்காரச் சட்டமாகவே உள்ளது. 

நவீன தாராளமய காலத்தில்...

நவீன தாராளமய காலத்தில் ஒப்பந்த முறை யின் உச்ச வடிவமாக தனியார்மயம் திகழ்கிறது. ஒப்பந்தமுறையில் தற்போது தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுக்கு  இணையாக அரசே ஒப்பந்தம் மற்றும் தனியார் முறையை கடைப்பிடிக்கி ன்ற புதிய போக்கு உருவாகியுள்ளது. ஏற்கனவே,  தொழில் முறை ஏஜெண்டுகள் இருந்த இடத்தில் தற் சமயம் ஒப்பந்த மற்றும்  தனியார் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

 ஒப்பந்த முறைக்கும் - தனியார்மயம் (அயற்பணி) முறைக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு என்னவென்றால், ஒப்பந்த முறையில் சம் பந்தப்பட்ட நிறுவனங்கள் முதலாளிகளுக்கு தேவை யான பணியாட்களை மட்டுமே சப்ளை செய்கின்றன. ஆனால் அயற்பணி (தனியார்மயம்) முறையை மேற் கொள்ளும் நிறுவனங்களானது O&M (operation and Maintanance) இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றன. முன்னதில், முதன்மை வேலை அளிப்பவர்(நிர்வாகம்)-ஒப்பந்த நிறுவனம்(முதலாளி)-தொழிலாளி என்கிற முக் கோண உறவு இருந்தது. பின்னதில், தனியார் முகமை- தொழிலாளி என்கிற இருவழி உறவு மட்டுமே உள்ளது. இது தொழிலாளர்களின் நலன் காக்கும் பொறுப்பிலி ருந்து அரசை முற்றிலுமாகத் துண்டித்துவிடுகிறது.  

ஒட்டுண்ணி வர்க்கங்களும், தொழிலாளர் அவல நிலையும்
அரசு ஒப்பந்தம் மற்றும் அயற்பணி முறைகளை மின்சாரம், போக்குவரத்து, உள்ளாட்சி, ஆவின் மற்றும் இதர துறைகளில் தீவிரமாக அமல்படுத்தும் போது, அயற்பணி முகமைகள் ஒப்பந்தங்களை  அதி கார வர்க்கத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கணிசமான தொகைகளை படிய ளப்பதன் மூலமாகக் கைப்பற்றுகின்றன. மேலும், மாதாமாதம் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்தின் சிறுபகுதியை களவாடவும் செய்கின்றன. இவ்வாறு ஆயிரக்கணக்கான தொழிலாளிகளிடமிருந்து பல லட்சங்களை கொள்ளையடிக்கின்றன.  

தனியார் நிறுவனம் மற்றும் அதிகார வர்க்கங்கள், ஒப்பந்தத் தொழிலாளியின் கைகளுக்கு வந்து சேரும் முன்பே ஊதியத்தின் ஒருபகுதியை அபகரித்துக் கொள்கின்றன! அவ்வாறு அபகரித்தப் பின் தொழிலா ளிகளின் கைகளுக்கு வந்து சேரும் அற்ப ஊதி யத்தின் இன்னொரு பகுதியை கடும்வட்டியின் மூல மாக கந்து வட்டிக்காரர்கள் ஒட்டச்சுரண்டுகின்றனர்.

இந்த ஈவிரக்கமற்ற கந்துவட்டிக்காரர்களிடம் தொழி லாளி ஒரு முறை அகப்பட்டுக்கொண்டால் பின்பு அதிலிருந்து மீடேறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல! குறிப்பாகச் சொல்வதென்றால் உள்ளாட்சித் துறையில் பணி செய்யும் தூய்மைப் பணி யாளர்கள் போன்ற அடிமட்டத் தொழிலாளர்கள் உயிர் வாழவேண்டி உழைப்பதற்குப் பதிலாக வட்டி கட்ட வும்-அசலைத் திருப்பிக் கட்டவுமே உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர்! இத்தகைய தனியார் நிறுவனம்-அதிகார வர்க்கம் கந்துவட்டிக் கும்பல் ஆகிய இந்த மூன்று பங்காளி கள் தான் ஒட்டுண்ணி வர்க்கங்களாக உள்ளனர். நிரந்த ரத் தன்மை கொண்ட வேலைகளில் தனியார், ஒப்பந்த முறையை புகுத்தி இந்த ஒட்டுண்ணி வர்க்கங்களுக்கு குறைவான ஊதியத்தில் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை உறிஞ்சிக் கொள்ளும் வாய்ப்பை அரசே  ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்பதே  தொழிலா ளர் வர்க்கத்தின் எதிர்பார்ப்பு. 

கட்டுரையாளர் : மாநில துணைத்தலைவர்,
உள்ளாட்சி ஊழியர் சங்கம் - (சிஐடியு)